பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை - மதுரையில் பயங்கரம்.!
man arrested for love torture to school student in madurai
பள்ளி மாணவிக்கு காதலிக்குமாறு தொல்லை கொடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள சோழவந்தான் அருகே கீழ்நாச்சிக்குளம் பகுதியை சேர்ந்தவர் நாகன். இவர் அதே பகுதியில் 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமியிடம் காதலிக்குமாறு தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி சம்பவம் குறித்து, தனது பாட்டியிடம் தெரிவித்தார்.

இதையடுத்து அந்த பாட்டி, சமயநல்லூர் மகளிர் போலீசில் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் படி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நாகனை கைது செய்தனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து பாலியல் தொல்லை உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க தமிழக போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
English Summary
man arrested for love torture to school student in madurai