கள்ளக்காதலுக்கு இடையூறு - கூலிப்படையை வைத்து மனைவியைக் கொன்ற காதல் கணவன்.! - Seithipunal
Seithipunal


பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராஜ்குமார்-பிரவீனா தம்பதியினர். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இதில், ராஜ்குமார், பெரம்பலூர் அருகே உள்ள தனியார் டயர் தொழிற்சாலையில் வேலை செய்து வருகின்றார்.

பிரவீனா பெரம்பலூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். இந்த நிலையில், ராஜ்குமாருக்கு ஒரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தம்பதியினருக்கு இடையே தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பணிக்கு செல்வதாக கிளம்பிய ராஜ்குமார், மனைவியை உறவினர் வீட்டில் விட்டு செல்வதாக கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார்.

செல்லும் வழியில் திடீரென அடையாளம் தெரியாத 4 பேர் தம்பதியினரை வழிமறித்து இருவரையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த ராஜ்குமார் சம்பவம் குறித்து உறவினர்களுக்கு தகவல் அளித்துள்ளார். அதன் படி உறவினர்கள் அங்கு வந்து பார்த்தபோது, பிரவீனா உயிரிழந்த நிலையிலும் ராஜ்குமார் காயமடைந்த நிலையிலும் கிடந்துள்ளனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சம்பவம் குறித்து ராஜ்குமாரிடம் கேட்டபோது, அவர் தங்களை மர்மநபர்கள் வெட்டிவிட்டு ஓடி விட்டதாக தெரிவித்துள்ளார். உடனே இந்த சம்பவம் குறித்து போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீஸார் மோப்பநாய் உதவியுடன் விசாரணை நடத்திய போது, மோப்ப நாய் ராஜ்குமார் சென்ற இடங்களுக்கு எல்லாம் சென்று இறுதியில் அவரை கவ்வி பிடித்துள்ளது. இதனால், ராஜ்குமார் மீது சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரித்த உண்மைகளை தெரிவித்துள்ளார்.

அதாவது, திருமணத்தை மீறிய தொடர்புக்கு இடையூறாக இருந்த மனைவியை ஆள் வைத்து தானே வெட்டிக் கொலை செய்ததாகவும், சந்தேகம் வராமல் இருக்க கையில் தானே வெட்டிக்கொண்டு நாடகமாடியதாகவும் தெரிவித்தார். இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, பின்னர் சிறையில் அடைத்தனர்.

மேலும், போலீஸார் இந்த சம்பவத்தில் தொடர்புடைய கூலிப்படையினரை தீவிரமாக தேடி வருகின்றனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மனைவியை கணவனே கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for kill wife in perambalur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->