மதுராந்தகம் | ரெயிலில் ஏற முயன்ற மாணவர் கீழே விழுந்து பலி! ரயில்வே போலீசார் விசாரணை!
madurathangam student tried board train fell down died
செங்கல்பட்டு, மதுராந்தகம் பகுதியைச் சேர்ந்தவர் கேசவமூர்த்தி. இவரது மகன் நேதாஜி (வயது 19) இவர் தாம்பரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.
நேதாஜி கடந்த 22 ஆம் தேதி காலை வழக்கம் போல் மதுராந்தகம் ரயில் நிலையத்திலிருந்து கல்லூரிக்கு செல்ல விழுப்புரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற பயணிகள் ரயிலில் அவர் ஏற முயன்றார்.
இதில் நேதாஜி நிலை தடுமாறி கீழே விழுந்து ரயிலுக்கும் தண்டவாளத்திற்கும் இடையே சிக்கிக்கொண்டார். இதனால் அவர் மீது ரயில் ஏறியதால் நேதாஜியின் உடல் பாகங்கள் முழுவதும் நசுங்கி துண்டானது.

இதனை பார்த்த ரயில்வே போலீசார் பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் நேதாஜியின் உடலை மீட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேதாஜி நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
madurathangam student tried board train fell down died