மதுரை, நாகை, திண்டுக்கல்! கஞ்சா கடத்தல், போதை, இன்ஸ்டா ரீல்! அதிரடியில் காவல்துறை! - Seithipunal
Seithipunal


மதுரையில் கஞ்சா போதையில் மக்களை அரிவாள், கத்தியால் தாக்கிய சிறுவர்கள் உட்பட நான்கு பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

மதுரை நேதாஜி சாலை பகுதிகள் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக மூன்று சிறுவர்கள் மற்றும் பிரவீன் குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். 

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கஞ்சா போதையில் விழுந்து கிடப்பது போல் இளைஞர்கள் வெளியிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சமூக வலைத்தளங்களில் பரவிய இந்த வீடியோ குறித்து போலீசார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. 

பழனி மலைக்கோயில் அடிவாரத்தில் உள்ள சிறுவர் பூங்கா ஒன்றில் சில இளைஞர்கள் கஞ்சா போதையில் கீழே கிடப்பது போல வீடியோ எடுத்துள்ளனர்.

மேலும் போதை பொருளை பயன்படுத்தி instagram-ல் இந்த வீடியோவை இளைஞர்கள் வெளியிட்டுள்ளனர். இது குறித்து அளித்த பொதுமக்களின் புகாரை அடுத்து போலீசார் அந்த இளைஞர்களை கைது செய்ய வலை வீசி தேடிக் கொண்டிருக்கின்றனர்.

நாகை அருகே 200 கிலோ கஞ்சாவை கடத்தி சென்ற நான்கு பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

நாகப்பட்டினம் : 200 கிலோ கஞ்சாவை கடத்தி சென்ற நான்கு பேரை சுற்றிவளைத்து போலீசார் கைது செய்துள்ளனர். மூன்று கார்களில் வந்த அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், காரில் சோதனை மேற்கொண்டனர். 

இதில் 200 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து கஞ்சா கடத்திய மணிராஜ், கௌதம், தட்சிணாமூர்த்தி, சிவமூர்த்தி ஆகிய நான்கு பேரையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madurai Nagai Dindigul Ganja case


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?


செய்திகள்



Seithipunal
--> -->