உடல் உறுப்பு தானம் தொடர்ந்து அதிகரித்து.!! மா.சுப்பிரமணியன் தகவல்.!! - Seithipunal
Seithipunal


சென்னை, சைதாப்பேட்டை ஜோதி அம்மாள் நகரை சேர்ந்த ராமமூர்த்தி(24) என்ற இளைஞர் விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில், அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது. உயிரிழந்த இளைஞரின் உடலுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா சுப்ரமணியன் "தமிழ்நாட்டில் 2022-ம் ஆண்டு 156 பேர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர். கடந்த 2023ம் ஆண்டில் 178 பேரும், இந்த ஆண்டில் தற்போது வரை 11 பேரும் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர் . உடல் உறுப்பு தானம் வழங்குவோர் எண்ணிக்கை தொடர்ந்து  அதிகரித்து வருகிறது" என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ma Subramanian info Organ donation continues to increase


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->