எம்-சாண்ட் லாரி புரண்டது...உயிரிழந்த தொழிலாளர்கள் யார்...? - சூடுபிடிக்கும் போலீஸ் விசாரணை - Seithipunal
Seithipunal


கரூர் அருகே உள்ள தென்னிலை பகுதியில் இன்று அதிகாலை எம்-சாண்ட் மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் லாரி திடீரென கவிழ்ந்தது.கனமழையால் சாலைகள் வழுக்கலாக இருந்த நிலையில், கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் புரண்டது என தெரிவிக்கப்படுகிறது.

அப்போது, லாரியின் மேல்பகுதியில் அமர்ந்திருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த மூவர், மணல் குவியலில் புதைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த அதிர்ச்சியூட்டும் விபத்தில், லாரி ஓட்டுநரும் மற்றொரு வடமாநில தொழிலாளியும் படுகாயமடைந்தனர்.உடனடியாக அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.விபத்தின் சரியான காரணம் இன்னும் வெளிவரவில்லை.

எந்திர கோளாறா, ஓட்டுநரின் அலட்சியமா அல்லது சாலை சீர்கேடா? என்பதை தெளிவுபடுத்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த சம்பவம் தென்னிலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் துயரத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

M Sand truck overturns Who dead workers Police investigation heats up


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->