முத்ரா கடன் திட்ட பயனாளிகளுடன் துணைநிலை ஆளுநர் கலந்துரையாடல்.! - Seithipunal
Seithipunal


முத்ரா திட்டத்தால் பயன் பெற்றவர்கள் மற்றவர்களுக்கு இதை ஏடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் கூறினார்.

பாரதப் பிரதமரின் முத்ரா கடன் திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவு அடைந்ததை ஒட்டி, புதுச்சேரி இந்தியன் வங்கியின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட முத்ரா கடன் திட்ட பயனாளிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது.  துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயனாளிகளுடன் கலந்துரையாடினார். மேலும் புதிய பயனாளிகளுக்கு முத்ரா கடன் வழங்குவதற்கான ஆணைகளை வழங்கினார். துணைநிலை ஆளுநரின் செயலர் மணிகண்டன், இந்தியன் வங்கி தலைமை மேலாளர் அன்பு காமராஜ், ஆகியோர் உடனிருந்தனர்.

நிகழ்ச்சியில், பயளானிகள் முத்ரா வங்கிக் கடன் தங்கள் வாழ்க்கையில் மறுமலர்ச்சி கொண்டு வந்ததாக விவரித்தனர். குறைந்த வட்டியில் தொழில் முன்னேற்ற ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டனர். மற்றவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கி உதவி வருவதையும் எடுத்துக் கூறினர். முத்ரா கடன் திட்டத்திற்காக மாண்புமிகு பாரதப் பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

பயளானிகளுடன் கலந்துரையாடிய துணைநிலை ஆளுநர், முத்ரா திட்டத்தால் பயன் பெற்றவர்கள் மற்றவர்களுக்கு இதை ஏடுத்துக் கூறி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார். மாண்புமிகு பாரதப் பிரதமரின் விருப்ப திட்டங்களின் ஒன்றான இந்த திட்டத்தின் கீழ் இது வரை 40 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டு இருக்கிறது. நாடு முழுவதும் 52 கோடி பேர் பயன் அடைந்து இருக்கிறார்கள். கோடிக்கனக்கான சிறு. குறு வியாபாரிகள், தொழில் முனைவோர், கடைக்காரர்கள், உணவு விடுதி நடத்துபவர்களின் தொழில் மற்றும வாழ்க்கை முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது. இளைஞர்கள், குறிப்பாக. பெண்கள் அதிக அளவில் பயன் அடைந்து இருக்கிறார்கள். இந்த திட்டம் அதன் இலக்கை நோக்கி சரியாக சென்று கொண்டிருக்கிறது என்று கூறி நெகிழ்ச்சி அடைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Lt Governor interacts with Mudra beneficiaries


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->