ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை முயற்சி.. காதலி உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை முயற்சியில் காதலி பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னையை அடுத்த பரங்கிமலை ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரயில் சென்று கொண்டிருந்தது.

அப்போது இளம் காதல் ஜோடி திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதில், இளம் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும், பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிந்த வாலிபரை மீட்ட ரயில்வே போலீசார், அரசு மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர். 

மேலும், உயிரிழந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Lovers attempt Suicide in railway station girlfriend death


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->