இன்ஸ்டா பழக்கம் - எதிர்ப்பை மீறி கரம் பிடித்த திருப்பூர் பெண் பொறியாளர்.! - Seithipunal
Seithipunal


இன்ஸ்டா பழக்கம் - எதிர்ப்பை மீறி கரம் பிடித்த திருப்பூர் பெண் பொறியாளர்.!

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மேல் செங்கம் கிராமத்தைச் சேர்ந்த பூவரசன் என்பவரும், திருப்பூர் மாவட்டம் கண்ணமநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த சௌமியா என்பவரும் பிரபல சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி வந்துள்ளனர். 

நாளாடைவில் இந்தப் பழக்கம் காதலாக மாறி இருவரும் தனிமையில் பேசி வந்தனர். இந்த நிலையில், செளமியாவின் பெற்றோருக்கு சந்தேகம் வரவே அவர்கள் கண்டித்து, செளமியாவுக்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். 

இதுகுறித்த தகவலை சௌமியா பூவரசனிடம் கூறியுள்ளார். உடனே பூவரசன் திருப்பூர் சென்று செளமியாவை நேற்று கையுடன் அழைத்து வந்து, இருவரும் இன்று காலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர்.

அதன் பின்னர் இருவரும் திருமண கோலத்தில் திருவண்ணாமலை காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இருதரப்பினரையும் வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

love couples took refuge in thiruvannamalai police station


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?


செய்திகள்



Seithipunal
--> -->