தவணை தொகையை கேட்டு மிரட்டிய நிதி நிறுவன ஊழியர்கள்: தூக்கில் தொங்கிய லாரி உரிமையாளர்: வீடியோ ஆதாரத்தை வைத்து போலீசார் விசாரணை..
Lorry owner commits suicide after being harassed by financial institution employees who threatened him for installment payments
தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் கடன் தவணையை கேட்டு லாரி உரிமையாளர் ஒருவரை மிரட்டியுள்ளனர். இதனால் மன உளைச்சல் அடைந்த நபர் வீடியோ பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகேயுள்ள காளி கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சேகர், (48). லாரி டிரைவரான இவருக்கு விஜயா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். கடந்த 05 ஆண்டுகளுக்கு முன்பு, அதே பகுதியை சேர்ந்த தனியார் நிதி நிறுவனத்தில் வட்டிக்கு கடன் வாங்கி லாரி ஒன்றை வாங்கி சேகர் தொழில் செய்து வந்துள்ளார்.

பின்னர் கடனை திருப்பி செலுத்தி வந்த நிலையில், நிதி நிறுவனத்தினர் வட்டிக்கு மேல் வட்டி போட்டுள்ளார். இறுதியில் சேகர் கொடுக்க வேண்டிய பணத்திற்காக அவரது லாரியை எடுத்து சென்றுள்ளனர். இதனால் சேகர் சங்ககிரியில் உள்ள வேறொரு தனியார் நிதி நிறுவனத்தில், கடன் வாங்கி டாரஸ் லாரியை வாங்கி ஓட்டி வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 03 மாதங்களுக்கு முன் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்ட்டுள்ளது. அதனால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதன் காரணமாக கடனை முறையாக செலுத்த முடியாமல் அவதிப்பட்டுள்ளார்.
இதனிடையே, நிதி நிறுவன ஊழியர்கள் அடிக்கடி அவரது வீட்டிற்கு வந்து பணம் கட்ட சொல்லி தொந்தரவு செய்து வந்துள்ளனர். அப்போது, சேகர் உடல்நிலை சரியில்லாததால் பணம் செலுத்த கால அவகாசம் கேகேட்டுள்ளார். அதற்கு நிதி நிறுவன ஊழியர்கள் 08 சேகர் மீது போலீசில் புகார் கொடுப்போம் என மிரட்டியுள்ளனர். இதனால் மன உளைச்சல் அடைந்த சேகர், நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

அதன் பின்னர், கடன் கொடுத்தவர்கள் கொடுத்த நெருக்கடியால் தான் மன உளைச்சலில் இருப்பதாகவும், தற்கொலை செய்து கொள்வதாகவும் வீடியோ ஒன்றை பதிவு செய்து, அவரது செல்போனில் இருந்து உறவினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். அத்துடன், கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு, அவரது வீட்டின் அருகே விவசாய தோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சேகர் தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சம்வபம் தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரி அடிப்படையில் அங்கு வந்த போலீசார், சேகரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அத்துடன், சேகர் இறப்பதற்கு முன் பதிவிட்ட வீடியோ மற்றும் கடிதத்தை கைப்பற்றி அவரை மிரட்டிய தனியார் நிதி நிறுவன அதிபர்கள் மற்றும் மேலாளரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Lorry owner commits suicide after being harassed by financial institution employees who threatened him for installment payments