போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டணை..உதகை மகளிர் நிதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு! - Seithipunal
Seithipunal


போக்சோ வழக்கில் குற்றவாளிக்கு வாழ்வின் இறுதிநாள் வரை ஆயுள் தண்டனையும், 15,000/- ரூபாய் அபராதமும் விதித்து  உதகை மகளிர் நிதிமன்ற நீதிபதி  செந்தில்குமார் தீர்ப்பளித்தார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் உட்கோட்டம் குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 28.01.2020 அன்று எதிரியான முரளி (31), த.பெ. ராமன், க.எண். 3/310, தும்பிமலை, கிழ் கேத்தகிரி என்பவர் குஞ்சப்பணையை சேர்ந்த 15 வயது சிறுமியுடன் பழகி அவரை பலவந்தமாக அவரது காரில் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கொடுத்த புகாரின் பேரில் குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற 01/2020 / 366 (4), 342, 376 (A) (B), 506 (ii) IPC and 5 (1) r/w 6 of POCSO Act @ 366, 506 (ii) IPC and 5 (1) rie 6 of POCSO Act என்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டது.

இந்த வழக்கில் புலன் விசாரணை முடித்து உதகை மகிளா நீதிமன்றத்தில், குன்னூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் விஜயலட்சுமி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். இவ்வழக்கை அரசு வழக்குறைஞர் திரு. P.செந்தில்குமார் வாதிட்டார். இந்த வழக்கில் நீதிமன்ற விசாரணை முடித்து குற்றவாளிக்கு வாழ்வின் இறுதிநாள் வரை ஆயுள் தண்டனையும், 15,000/- ரூபாய் அபராதமும் விதித்து  உதகை மகளிர் நிதிமன்றம்  நீதிபதி  செந்தில்குமார் தீர்ப்பளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Life sentence for the perpetrator in the POCSO case Udhagai womens tribunal makes a sensational ruling


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->