வீட்டுக்குள்ள சிறுத்தையா...! அலறியடித்து ஓடாமல் ரூமுக்குள் வச்சு லாக் செய்த உரிமையாளர்...! - அடுத்து நடந்தது என்ன...?
leopard house owner who didnt run away screaming locked himself room What happened next
நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள மாயார் பகுதியில் நள்ளிரவில் நிகழ்ந்த சிறுத்தை ஊடுருவல் சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.கடந்த சில நாட்களாக மாயார் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிறுத்தையின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக, குடியிருப்பு பகுதிகளில் வளர்க்கப்பட்ட நாய்களை குறிவைத்து அந்த சிறுத்தை அடிக்கடி வேட்டையாடி வந்ததால் மக்கள் அச்சத்தில் இருந்து வந்தனர்.இந்த சூழலில், நேற்று நள்ளிரவு குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை, அங்கிருந்த ஒரு வீட்டிற்குள் திடீரென புகுந்து வளர்ப்பு நாயை தாக்க முயன்றது.
வீட்டுக்குள் எதிர்பாராத விதமாக சிறுத்தை புகுந்ததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தாலும், வீட்டின் உரிமையாளர் அபார தைரியத்துடன் செயல்பட்டார்.சிறுத்தை வீட்டின் ஒரு அறைக்குள் நுழைந்ததை கவனித்த அவர், ஒரு நொடியும் தாமதிக்காமல் வெளியிலிருந்து அந்த அறையின் கதவை பூட்டி விட்டார்.
இதனால் வெளியேற முடியாமல் சிறுத்தை அறைக்குள்ளேயே சிக்கிக்கொண்டது.இந்த தகவல் கிடைத்தவுடன் வனத்துறையினரும் காவலர்களும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், அப்பகுதி பொதுமக்கள் சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி பாதுகாப்பாக பிடித்து மீண்டும் வனப்பகுதிக்குள் கொண்டு செல்ல வேண்டும் என வலியுறுத்தினர்.உயிருக்கு ஆபத்தான தருணத்திலும் அசாதாரண துணிச்சலுடன் செயல்பட்டு பெரும் அசம்பாவிதத்தை தவிர்த்த வீட்டின் உரிமையாளரை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
English Summary
leopard house owner who didnt run away screaming locked himself room What happened next