வெளுத்து வாங்கும் கனமழை : 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை.! - Seithipunal
Seithipunal


தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை கரையை கடந்தது. அதன் காரணமாக தமிழகத்தில் உள்ள டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை மழை பெய்து வருகிறது. இதனால், நேற்று முதல் சில தென்மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விஸ்டுமுறை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று இரவு முழுவதும் விடாது பெய்த கனமழையால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நான்கு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அந்தவகையில், டெல்டா மாவட்டமான தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், திருவாரூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல், நாகப்பட்டினத்தில் 1 - 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி மாநிலத்தில் காரைக்கால் மாவட்டத்தில் மட்டும் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

leave announcement four districts due to heavy rain


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->