செய்யும் தொழிலே தெய்வம் என வாழும் உழைப்பாளர்களுக்கு மே தின நல்வாழ்த்துக்கள் -டிடிவி தினகரன் - Seithipunal
Seithipunal


உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தொழிலாளர்களுக்கு வாழ்த்து செய்தி வெளிட்டுள்ளார். அவர் வாழ்த்து செய்தியில் அவர் குறிவுள்ளதாவது ,

ஒழுக்கம் மக்களின் மேன்மை உலகிற்கு பறைசாற்றும் மகிழ்ப்பார்கள் தினத்தை உரிமையோடு கொண்டாடடும் தொழிலாளர்கள்  அனைவருக்கும் எனது மனமார்ந்த மே தின நல்வாழ்த்துக்ககளை தெரிவித்துக் கொள்கிறேன்.

உடல் உழைப்பை மட்டும் மூலதனமாக கொண்டு மானுட நகரத்தின் வளர்ச்சிக்கு  மாபெரும் பங்காற்றிய  முன்னோர்கள், தங்களின் அடிமைத்தனத்தை உடைத்து எறிந்து ஒற்றுமையுடன் போராடி அவர்களின் உரிமைகளை வென்றெடுத்த நாளே மே தினம் எனும் உழைப்பாளர் தினநாளாகும்.

செய்யும் தொழிலே தெய்வம் என்ற பழமொழிக்கு ஏற்ப நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அன்றாட வாழ்வில் சமூக ஏற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் தொழிலாளர்களை மே தின நன்னாளில் போற்றி மகிழ்வோம்.

உழைப்பே உயர்வு தரும் உழைப்பால் கிடைக்கும் பயனே மனநிறைவை தரும் என்ற நம்பிக்கையோடு கடினமாக உழைத்துக் கொண்டிருக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் வெற்றி நிச்சயம் எனக் கூறிக்கொண்டு உழைப்பாளர்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது இதயம் கனிந்த மே தின நல்வாழ்த்துக்களை உரித்தாக்கிக் கொள்கிறேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Labour Day wishes ttv dinakaran


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->