குறவர் சமுதாய மடம் ஆக்கிரமிப்பு ..வனவேங்கைகள் கட்சியினர் போராட்டம்!  - Seithipunal
Seithipunal


பழனி சன்னதி வீதியில் உள்ள குறவர் சமுதாய மடம் தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதை கண்டித்து வனவேங்கைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பழனி சன்னதி வீதியில் உள்ள குறவர் சமுதாய மடம் தனியாரால் ஆக்கிரமிக்கப்பு செய்யப்பட்டு உள்ளதை கண்டித்து,வனவேங்கைகள் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட குழு சார்பில், பழனி மின்வாரிய அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் உலகநாதன், வள்ளி பெருந்தகை பாசறை மாவட்ட செயலாளர் கோகிலவாணி, துணை செயலாளர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கட்சி தலைவர் பொ.மு.இரணியன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கண்டன உரை ஆற்றி பேசினார். முன்னதாக ஆர்ப்பாட்டத்தின்போது, பழனி சன்னதி வீதியில் உள்ள குறவர் சமுதாய மடம் தனியாரால் ஆக்கிரமிக்கப்பு செய்யப்பட்டு உள்ளதை கண்டித்தும், அதை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் கட்சி நிர்வாகிகள் கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kruvar communitys protest by the Vanavengai party


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->