#BigBreaking || கொடூரன் மீது பாய்ந்தது குண்டர் தடுப்புச் சட்டம்.! சற்றுமுன் போலீசார் அதிரடி.!
kovai muthukumar kundas
கோவை மாவட்டம், சிவானந்தபுரம் யமுனா நகரில் தூய்மைப் பணியாளர்கள் இன்று காலை பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள முட்புதரில் சாக்கு பை ஒன்று கிடந்தது. அதிலிருந்து துர்நாற்றம் இருந்ததால் சந்தேகமடைந்த அவர்கள் அந்த சாக்கை அதை வைத்து பார்த்துள்ளனர்.
அதில், அழுகிய நிலையில் கை கால்கள் கட்டப்பட்ட சிறுமியின் சடலம் இருந்ததைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர். தடவியல் துறையினர் உதவியோடு உடலைப் பரிசோதனை செய்ததில் அது 15 வயது சிறுமியின் சடலம் என்பது கண்டறியப்பட்டது.
உடனே இது குறித்து விசாரணை மேற்கண்ட போது அந்த பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் கடந்த 11ஆம் தேதி காணாமல் போனதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு இருந்ததை உறுதி செய்தனர். சிறுமியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த வழக்கில் சிறுமியின் தாயாரின் ஆண் நண்பரான முத்துக்குமார் தான் சிறுமியை கொலை செய்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போக்ஸோ சட்டத்தின் கீழும், கொலை வழக்கு பதிவும் செய்த போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இந்த நிலையில், முத்துக்குமார் மீது சற்றுமுன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து மீண்டும் கைது செய்துள்ளனர்.