JustIN: கோழிக்கோடு அருகே கட்டிட விபத்தில், தமிழகத்தை சார்ந்த 2 தொழிலாளர்கள் பலி.!
Kerala Kozhikode Near Area Construction Accident 2 Tamil Native Workers Lost Life
கோழிக்கோடு அருகே நடந்த விபத்தில், தமிழ்நாட்டினை சார்ந்த கட்டுமான தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
கேரளா மாநிலத்தில் நடைபெறும் கட்டுமான பணிகள், தேயிலை தோட்ட வேலைகளுக்கு கூலித்தொழிலாளர்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தை சார்ந்தவர்களும் சென்று பணியாற்றி வருகின்றனர். சில நேரங்களில் அங்கு பணிகள் நடைபெறும் போது எதிர்பாராத விபத்துகளும் ஏற்படும்.
இந்நிலையில், கேரள மாநிலத்திலுள்ள கோழிக்கோடு அருகே நடந்த கட்டுமான பணியின்போது, கட்டிடம் சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இருவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் (வயது 21) என்ற இளைஞரும், மற்றொரு நபரும் உயிரிழந்ததாக அங்குள்ள தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது. மேலும், உடன் பணியாற்றிய 5 பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள காவல் துறையினர், உயிரிழந்த மற்றொருவர் யார்?. காயம் அடைந்தவர்களின் பெயர் மற்றும் விபரங்கள் என்ற தகவலை சேகரித்து வருகின்றனர். தற்போது அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், சிகிச்சைக்கு பின்னர் விபரங்கள் தெரியவரும்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Kerala Kozhikode Near Area Construction Accident 2 Tamil Native Workers Lost Life