உடலுறுப்புக்கள் அழுகி இறந்த காதலன் வழக்கில், காதலி பகீர் வாக்குமூலம்.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நெய்யூர் பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில் 23 வயதான சரோன் ராஜ் என்பவர் படித்து வந்தார். இவர் தமிழக கேரளா எல்லையில் வசிக்கும் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். 

கடந்த அக்டோபர் 14ஆம் தேதி தனது நண்பருடன் காதலியை பார்க்க சென்ற நிலையில் அந்தப் பெண்ணின் வீட்டிற்குள் அவர் மட்டும் சென்றுள்ளார். சற்று நேரத்தில் திரும்பி வந்த அவர் நண்பனிடம் வயிறு வலிப்பதாக கூற அவரை நண்பர் மருத்துவமனையில் சேர்த்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த அக்டோபர் 25ல் பரிதாபமாக உயிரிழந்தார். உடல் உறுப்புகள் செயலிழந்து அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிய நிலையில், இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் சரோன் ராஜின் பெண் தோழியை அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். 

அதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. அவர் விஷம் கொடுத்து கொலை செய்துள்ளார் என்று இதை காதலி கிரிஷ்மா ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால் அவர் எதற்காக விஷம் கொடுத்தார் என்பது குறித்த தகவல்கள் இல்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kerala kanniyakumari boy death issue girl friend statement


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->