கன்னியாகுமரி: திருமண வயதில் பிள்ளை இருக்கையில், கள்ளக்காதலனுடன் ஓட்டமெடுத்த பெண்மணி..!
Kanyakumari Affair couple Missing Police Investigation 16 Feb 2021
நாகர்கோவில் மாவட்டத்திலுள்ள ஆசாரிபள்ளம் காந்தி காலனி பகுதியை சேர்ந்த 45 வயது பெண்மணி, அவரது கணவர் மற்றும் மகன், மகளுடன் வசித்து வந்துள்ளார். இவரது கணவர் பெயிண்டிங் வேலை செய்து வரும் நிலையில், இந்த தம்பதிக்கு கல்லூரியில் முதலாம் வருடம் பயின்று வரும் மகளும், பத்தாம் வகுப்பு படிக்கும் மகனும் இருக்கின்றனர்.
இந்த நிலையில், போதிய வருமானம் இல்லாததால் குடும்பம் வறுமையில் வாடிய நிலையில், அக்கம்பக்கத்தினர் உதவி செய்து வந்துள்ளனர். இதன்போது அப்பகுதியை சேர்ந்த இளைஞர், அந்த குடும்பத்திற்கு உதவி செய்து வந்துள்ளார். இதன்பேரில், அவ்வப்போது தம்பதியின் இல்லத்திற்கு வந்து சென்றுள்ளார்.
இந்த பழக்கத்தால், 45 வயது பெண்ணிற்கும் - 26 வயது இளைஞருக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் அவ்வப்போது தனிமையில் உல்லாசமாக இருந்து வந்த நிலையில், தங்களின் பிள்ளைகளை உறவினர்களின் வீட்டில் தங்க வைத்தும், பெண்ணின் இல்லத்தில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இதற்குள்ளாக, கள்ளக்காதல் ஜோடி வீட்டிற்கு டைல்ஸ் போட வேண்டும் என்று அக்கம் பக்கத்தினரிடம் ரூ.1000 முதல் ரூ.5000 வரை வசூல் செய்து, ரூ.30 ஆயிரம் பணம் சேர்ந்ததும் கம்பி நீட்டியுள்ளது. இந்த விஷயம் தொடர்பாக பெண்ணின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் மேற்கூறிய தகவல் தெரியவந்துள்ளது.
கள்ளக்காதல் ஜோடி எங்கு உள்ளது என காவல் துறையினர் தேடி வருகின்றனர். மேலும், தாயின் தவறான உறவை அறிந்த மகள், முன்னதாகவே தாயை எச்சரித்து இருந்தும் இந்த சோகம் அரங்கேறியுள்ளது.
Tamil online news Today News in Tamil
English Summary
Kanyakumari Affair couple Missing Police Investigation 16 Feb 2021