காஞ்சிபுரம்: 11-ம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை - பள்ளி சிறுவர்கள் கைது! - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் மாவட்டம், களக்காட்டூர் ஊராட்சியை சேர்ந்த தம்பதிக்கு மூன்று மகளும் ஒரு மகனும் உள்ளனர்.

அவர்களில் ஒருவர், காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகம் அருகேயுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பில் படித்து வருகிறார்.

இந்நிலையில், அந்த மாணவிக்கு குளிர்பானத்தில் மதுபானம் கொடுத்து, பின்னர் வங்கியின் பின்புறம் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக, 22 வயது வாலிபர் மற்றும் மூன்று மாணவர்கள் மீது புகார் எழுந்துள்ளது.

இதில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள், பாதிக்கப்பட்ட மாணவிக்கு விட குறைவான வயதுடையவர்கள் எனத் தெரிகிறது.

காஞ்சிபுரம் மாநகர காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து, இரண்டு பள்ளி மாணவர்களையும் அந்த வாலிபரையும் கைது செய்து விசாரணைக்கு எடுத்துள்ளனர். மேலும், மற்றொரு மாணவனை தேடிப் பிடிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

தொடர்ந்த விசாரணையில், அந்த வாலிபர் சம்பவத்தில் தொடர்பில்லை என மாணவி வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, சிறுவர்களாக இருப்பதால், அவர்கள் மீது காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kanjipuram Harassment Arrest POCSO law 


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->