#BREAKING :: ம.நீ.ம சார்பில் சென்னையில் ஜல்லிக்கட்டு போட்டி... கமலஹாசன் அறிவிப்பு...!! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்து கொண்ட மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் சென்னையில் உள்ள தனியார் மண்டபத்தில் கமல் கலைக்கூடம் எனும் நிகழ்ச்சியை அக்கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் கலந்து கொண்டார். 

அப்போது பேசிய அவர் "தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை சென்னையில் மக்கள் நீதி மையம் சார்பில் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். கூடிய விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாகும்" என கட்சி நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டத்தில் கமலஹாசன் அறிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kamal Haasan announced jallikattu in chennai on behalf of MNM


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->