சசிகலாவால் ஆபத்து! போயஸ் தோட்டத்தில் நடந்தது என்ன? - ஜெ. தீபா அதிர்ச்சி பேட்டி! - Seithipunal
Seithipunal


கொலை மிரட்டல் விடுத்ததாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசான ஜெ. தீபா மீது, கோயில் பூசாரி புகார் அளித்த நிலையில், சசிகலாவால் தனக்கும், தனது கணவருக்கும் ஆபத்து இருப்பதாகவும் ஜெ. தீபா குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை போயஸ் தோட்டத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டின் சுவற்றில் விநாயகர் கோவில் உள்ளது.

இந்த கோவிலின் பூசாரி ஹரிகரன், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ தீபா, தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த நிலையில், ஜெ. தீபாவும் அவரின் கணவரும் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பூசாரியின் மீது புதிய புகார் ஒன்றை அளித்துள்ளனர்.

காவல் நிலையத்தில் புகார் அளித்த பெண் செய்தியாளர்களை சந்தித்த ஜெ. தீபா, கோவிலில் விநாயகர் சிலை கவசத்தை ஹரிஹரன் கழட்டியதாகவும், பூசாரி ஹரிஹரன் கூறுவது போல் எதுவும் நடைபெறவில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், ஹரிஹரனுக்கு பின்னால் சசிகலா இருக்கிறார் என்றும், தனக்கும், தனது கணவருக்கும் சசிகலாவால் ஆபத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

J Deepa Complaint against saiskala


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->