கும்பகோணம் அருகே ஆன்லைன் கேமால் உயிரிழந்த ஐடி ஊழியர்..!!
it employee died for loss money to online game in nachiyarkovil
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் அரசமர தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். ஐ.டி.ஊழியரான இவர், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தனது மொபைல் போனில் ஆன்லைன் கேம் விளையாடியுள்ளார்.

அதில் சுரேஷ்குமார் ரூ.50 ஆயிரம் பணத்தை இழந்துள்ளார். இதனால், மிகுந்த மனஉளைச்சலில் இருந்து வந்துள்ள சுரேஷ்குமார் நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த நாச்சியார்கோவில் போலீசார் சுரேஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
it employee died for loss money to online game in nachiyarkovil