என்ன பள்ளி மாணவர்களுக்கு இவ்வளவு தொகையா?ஆந்திராவில் புதிய திட்டம் அமல்.!
Is this much amount for the school students? A new scheme is implemented in Andhra
பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15,000 கல்வி உதவித்தொகை வழங்கும் புதிய திடத்தை ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிமுகம் செய்துள்ளார்.இதன் மூலம் 67 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைய உள்ளனர்.
ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவருகிறது.இந்தநிலையில் சட்டசபை தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை முதல்வர் சந்திரபாபு நாயுடு ஒன்று ஒன்றாக நிறைவேற்றிவருகிறார்.அதன்படி பள்ளி மாணவர்களுக்கான முக்கியமான திட்டத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று அறிவித்துள்ளார்.மேலும் ஆந்திர அரசு 'தல்லிக்கு வந்தனம்' என்ற பெயரில் புதிய திட்டத்தை இன்று முதல் நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.
ஆந்திர மாநிலம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், 'சூப்பர் சிக்ஸ்' திட்டத்தின் கீழ் அறிவித்த மற்றொரு வாக்குறுதி இன்று முதல் அமலுக்கு வரும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.இதன்படி, 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை இன்டர்மீடியட் பயிலும் மாணவ, மாணவிகள் அனைவருக்கும் ஆண்டுக்கு ரூ.15,000 கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதற்கான தொகை மாணவர்களின் தாயார் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட உள்ளது.
1-ம் வகுப்பு மற்றும் இன்டர்மீடியட் முதலாம் ஆண்டு சேரும் மாணவர்களுக்கு மட்டும், அவர்கள் பள்ளிகளில் சேர்ந்த பிறகு, அந்தந்த பள்ளிகளின் பதிவேட்டு பட்டியலின் அடிப்படையில் அவர்களின் தாயாருக்கு ரூ.15,000 பின்னர் வழங்கப்படும் எனவும் ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் மூலம் 67,27,164 மாணவ, மாணவிகள் பயனடைய உள்ளனர். இதற்காக ஆந்திர அரசு ரூ.8,745 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசின் புதிய திட்டத்தின் கீழ், இதன் மூலம் 67 லட்சம் மாணவ, மாணவிகள் பயனடைய உள்ளனர்.
English Summary
Is this much amount for the school students? A new scheme is implemented in Andhra