புசுபுசுன்னு குஷ்பூ இட்லி... குழந்தைங்க பார்த்தா உடனே எடுத்து சாப்பிடுவாங்க...
Khushboo Idli
குஷ்பு இட்லி
தேவையான பொருட்கள் :
பொருள் - அளவு
புழுங்கல் அரிசி - 4 டம்ளர்
பச்சரிசி - 4 டம்ளர்
உளுத்தம் பருப்பு - 2 டம்ளர்
சின்ன ஜவ்வரிசி - 2 டம்ளர்
வெந்தயம் - 4 டீஸ்பூன்
ஆமணக்கு விதை - 6
உப்பு - தேவையான அளவு

செய்முறை :
முதலில்,குஷ்பு இட்லி செய்வதற்கு முதலில் புழுங்கல் அரிசி மற்றும் பச்சரிசியை ஒன்றாகவும், உளுத்தம் பருப்பு, சின்ன ஜவ்வரிசி, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாகவும் சேர்த்து 4 மணி நேரம் ஊற வைக்கவும்.அடுத்து ஊற வைத்த உளுத்தம் பருப்பு, சின்ன ஜவ்வரிசி, ஆமணக்கு விதை, வெந்தயம் ஆகியவற்றை கிரைண்டரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
அடுத்து ஊற வைத்த புழுங்கல் அரிசி, பச்சரிசியை போட்டு நன்கு அரைத்து, அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கரைத்து 10 மணி நேரம் புளிக்க விடவும். இட்லி தட்டுகளில் எண்ணெயை தடவி, புளித்த மாவை ஊற்றி இட்லி குக்கரில் வைத்து வேக வைத்து எடுக்கவும்.சுவையான குஷ்பு இட்லி தயார்.