கோவிலில் இப்படி கூட ஜோதிடமா...? எலி வைத்து ஜோதிடத்தை கண்ட பக்தர்கள் அதிர்ச்சி..!
Is even astrology temple Devotees shocked astrology using rat
ஆந்திரா சித்தூர் மாவட்டம் வடமலைப்பேட்டை மண்டலத்தில் இருக்கும் எஸ்.வி.புரம் அஞ்சேரம்மா கோவிலில் ஒரு விசித்திர ஜோதிடம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
நாராயணவனத்தை சேர்ந்த சித்தமுனி என்பவர், கடந்த 30 ஆண்டுகளாக ஒரு கிளியை வைத்துக் கொண்டு ஜோதிடம் தெரிவித்து வந்தார்.

சென்னைக்கு ஒரு வருடத்திற்கு முன்பு பயணம் சென்றபோது, அங்கு “எலி ஜோதிடம்” என்ற புதுமை முறையை கண்டார். அங்கு அதிர்ச்சியடைந்த அவர் அங்கு நன்கு பயிற்சி பேற்ற எலியை காசுகொடுத்து வாங்கி கொண்டு ஊர் திரும்பினார்.
இப்போது கோவிலில் கணேஷ் என பெயரிடப்பட்ட எலியை வைத்து ஜோதிடம் நடைபெற்று வருகிறது. மேலும், விநாயகரின் வாகனமாகக் கருதப்படும் கணேஷ், பக்தர்களையும் சுற்றியுள்ள கிராமவாசிகளையும் தனது அற்புதமான முன்னறிவிப்பால் கவர்ந்துக்கொண்டிருக்கிறது.
இந்த அதிசயத்தை பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
English Summary
Is even astrology temple Devotees shocked astrology using rat