தமிழகத்தின் சிறந்த மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி விருது வழங்கினார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சிறந்த மாநகராட்சியாக சேலம் மாவட்டம் தேர்வு செய்யப்பட்டு, சுதந்திர தின விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது வழங்கியுள்ளார்.

நமது நாட்டின் 75 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம் கோலாகாலமாக நடைபெற்று வருகின்ற அது மட்டும் இல்லாமல் நடைபாண்டில் சிறந்த மாநகராட்சி மற்றும் நகராட்சியை தேர்வு செய்யப்படு விருதுகள் மற்றும் பரிசுகளும் வழங்கப்பட்டுள்ளது. 

 தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் உள்ளாட்சி அமைப்புகள் தேர்வு செய்யப்பட்டு, சுதந்திர தினத்தன்று முதல்வரின் சிறப்பு விருது மற்றும் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த ஆண்டு தமிழகத்திலேயே சிறந்த மாநகராட்சியாக சேலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் நடக்கும் சுதந்திர தினவிழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விருது மற்றும் சிறப்பு நிதியாக ரூ.25 லட்சத்தை சேலம் மாநகராட்சிக்கு வழங்கியுள்ளார்.

அதேபோல், நடப்பாண்டு சிறந்த நகராட்சிக்கான முதலிடம் பிடித்த ஸ்ரீவில்லிபுத்தூருக்கு ரூ.15 லட்சமும், இரண்டாம் இடம் பிடித்த குடியாத்தத்திற்கு ரூ.10 லட்சமும், மூன்றாம் இடம் பிடித்த தென்காசிக்கு ரூ.5 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Independence day tn govt awards and prizes


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->