தனியாக இருந்த பள்ளி ஆசிரியை...! காம கொடூர மாணவனின் எண்ணம் நிறைவேறாததால்., அரங்கேறிய வெறிச்செயல்..!!
in kanniyakumari teacher try to rap by student police investigation going on
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தினமும் அரங்கேறிக்கொண்டு வருகிறது. இதனை தடுப்பதற்கு பெண்களுக்கு எதிரான அநீதிகளில் ஈடுபடும் நபர்கள் கடுமையாக சட்டங்களின் கீழ் தண்டிக்கப்பட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம் அருகேயுள்ள ஆளஞ்சோலை கைத்தக்கல் பகுதியை சார்ந்த 25 வயதுடைய இளம்பெண்ணொருவர்., அங்குள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
இவர் தனது இல்லத்தில் இந்த பகுதியை சார்ந்த மாணவ - மாணவியர்களுக்கு டியூஷன் நடத்தி வரும் நிலயில்., இதே பகுதியை சார்ந்த 11 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர் அவ்வப்போது டியூஷனிற்கு வந்து நோட்டமிட்டு சென்றுள்ளான்.

இந்த நிலையில்., ஆசிரியை வீட்டில் தனியாக இருப்பதை அறிந்த மாணவன்., வீட்டிற்குள் விரைந்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்துள்ளான். ஆசிரியையின் வாயில் துணியை வைத்து ஆசிரியையை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்ததை அடுத்து., ஆசிரியை சுதாரித்து இவனிடம் இருந்து தப்பியுள்ளார்.
இதனால் கடும் ஆத்திரத்துக்கு உள்ளான காம கொடூரன்., ஆசிரியையை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளான். இவரின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் ஆசிரியையை மீட்டு அங்குள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர்., இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
in kanniyakumari teacher try to rap by student police investigation going on