ஒருதலைக்காதல்.. நண்பர்களிடம் வெட்டி பந்தா.. புருடாவை நம்பி சூடத்தில் சத்தியம்.. கையெரிந்து கதறும் நண்பர்கள்..!! - Seithipunal
Seithipunal


சென்னையில் உள்ள மாங்காடை அடுத்துள்ள கெருகம்பாக்கம் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று அதிவேகத்தில் காரொன்று சென்று, அங்குள்ள சாலையோரமாக இருக்கும் பள்ளத்தில் சிக்கி நின்றுள்ளது. இந்த நேரத்தில், காரில் பயணம் செய்வதர்களில் பெண்ணின் அலறல் சத்தம் அதிகளவு கேட்டுள்ளது. 

விபத்தை கண்டு அதிர்ச்சிக்குள்ளான மக்கள், பெண்ணின் அலறல் சத்தம் விபத்திற்கு மாறாக கேட்டதை அடுத்து, பதறியபடி சென்று காரை பார்த்துள்ளனர். இந்த நேரத்தில், காரில் இளம்பெண்ணின் பிடியில் இருந்து தப்பிக்க வழி தெரியாது மூன்று இளைஞர்கள் திணறிக்கொண்டு இருப்பதும், இளம்பெண் அக்கம் பக்கத்தினரின் உதவிக்காக குரல் எழுப்பியதும் புரியவந்துள்ளது. 

இதனையடுத்து அங்கு திரண்டிருந்த மக்கள் அனைவரும் இளைஞர்களுக்கு தர்ம அடியினை தாராளமாக கொடுத்து, அங்குள்ள மாங்காடு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று ஒப்படைத்தனர். பின்னர் காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில், தனது நண்பனின் ஒருதலைக்காதல் சம்பவத்திற்கு உதவி செய்ய, உளவுப்பிரிவு காவல் அதிகாரியின் மகளை கடத்தி சென்றதும், கல்லூரி செல்லும் வழியில் மாணவியை கடத்தி சென்ற போது கூட்டாக சிக்கிக்கொண்டதும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான விசாரணையில், மதனந்தபுரம் பகுதியை சார்ந்தவர் அரவிந்த்குமார். இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் வருடம் பயின்று வருகிறார். இந்த நிலையில், கோடம்பாக்கம் மகளிர் கல்லூரியில் பயின்று வந்த உளவுப்பிரிவு காவல் அதிகாரியின் மகளை அரவிந்த் ஒருதலைக்காதல் செய்து வந்துள்ளார். 

இந்த நேரத்தில், நண்பர்களிடம் தன்னையும் ஒரு பெண் காதலித்து வருகிறார் என்று கூறி ரோமியோ பேரை தக்க வைக்க நினைத்த அரவிந்த், தனது நண்பர்களிடம் மனம்கொத்தி பறவை திரைப்படத்தின் சிவகார்த்திகேயன் போல, தனது மனதில் நிறைந்திருந்த கற்பனையை அளவில்லாமல் பின்னணி இசையுடன் அள்ளிவிட்டுள்ளார். 

பின்னணி இசையினை இசைக்க இரண்டு நண்பர்கள் கால, நேரத்தை கூட அறியாமல் தொடர்ந்து தனது நண்பனின் காதல் வாழ்க்கையினை கேட்டு குதூகலித்து வந்துள்ளனர். மேலும், எந்த பிரச்சனை வந்தாலும் உங்களின் காதலுக்கு நாங்கள் உதவி செய்வோம் என்று இரண்டு நண்பர்கள் சூடத்தில் அடித்து சத்தியம் செய்து கொடுத்துள்ளனர். 

இதனையடுத்து சூடத்தில் சத்தியம் செய்த நாளை நோக்கி நண்பர்கள் காத்திருக்க, காதலனும் நாள் குறித்துள்ளான். இவர்களின் திட்டப்படி, காதலன் தனது நண்பர்களிடம் மாணவிக்கு வீட்டில் வரன் பார்த்துள்ளதாகவும், அவள் இல்லையேல் நானினில்லை... நான் இல்லையேல் அவளில்லை.. என்று பல திரை வசனங்களை அள்ளிவிட, சத்தியம் செய்த நெஞ்சங்கள் துடிதுடித்து போயுள்ளது. 

பின்னர் மனைவியை கடத்த திட்டமிட்டு தனது நண்பர்களுடன் காரில் புறப்பட்டு சென்று, மாணவியை காத்திருந்து காரில் தூக்கி கடத்தி, வாயில் துணியை வைத்து பயணத்தை துவக்கியுள்ளனர். இதற்கு பின்னரே அரவிந்தின் ஒருதலை காதல் தெரியவந்துள்ளதை அடுத்து, பெண் காப்பாற்ற கூறி காரில் அலற, சத்தியத்தை மீறாத சாத்தியவான்கள் தாலியாவது கட்டிவைத்துவிட வேண்டும் என்று உறுதியாக இருந்துள்ளனர். 

சாத்தியவான்கள் இருவருக்கும் ஒருதலைக்காதல் உண்மை தெரிந்த பின்னர், காரிலேயே கலவரம் செய்து பயணம் செய்ததில் இவர்களாகவே சிக்கியுள்ளனர். தற்போது காவல் துறையினரிடம் சிக்கியுள்ள நிலையில், கடத்தல் சம்பவத்தில் சத்தியம் செய்து ஈடுபட்ட இருவரும் 11 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவர்கள் என்பதால் சட்டப்படி சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in chennai one side lover spoil life with his friends


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->