எளிய மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தான் முக்கிய நோக்கம்..MLA அனிபால் கென்னடி பேச்சு!
Improving the livelihood of ordinary people is the main objective MLA Anibal Kennedys speech
“எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவது தான் எங்களின் முக்கிய நோக்கம்” என்று சட்டமன்ற உறுப்பினர் திரு. அனிபால் கென்னடி கூறினார்.
புதுச்சேரி உப்பளம் தொகுதியிலுள்ள திப்புராயப்பேட்டை நிக்கோலஸ் குடியிருப்பில் நீண்ட ஆண்டுகளாக வசித்து வரும் குடும்பங்களுக்கு சட்டபூர்வ உரிமை வழங்கும் நோக்கில், வீட்டு மனைப்பட்டா வழங்கும் திட்டத்தை சட்டமன்ற உறுப்பினர் திரு. அனிபால் கென்னடி தொடக்கமாக சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றார்.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, சமீபத்தில் நில அளவைத் துறை, வருவாய்த் துறை மற்றும் நகராட்சி அதிகாரிகள் இணைந்து கணக்கெடுப்பு மற்றும் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர். இதனையடுத்து, உப்பளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. அனிபால் கென்னடி, புதுச்சேரி கலெக்டர் திரு. குலோத்துங்கன் மற்றும் நில அளவைத்துறை இயக்குனர் செந்தில்குமார் ஆகியோருடன் திப்புராயப்பேட்டை பகுதியில் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது, “நிகோலஸ் குடியிருப்பில் பலருக்கும் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்த உறைவிடம் இருந்தாலும், அவர்களுக்கு உரிய சட்ட உரிமை இல்லாத நிலை உள்ளது. எனவே அவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்குவதுடன் அடிப்படை வசதிகளும் செய்யப்பட வேண்டும்” என சட்டமன்ற உறுப்பினர் கலெக்டரிடம் கோரிக்கை வைத்தார். இதற்குப் பதிலளித்த கலெக்டர், உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், அரசுடன் ஆலோசித்து திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் உறுதியளித்தார்.
இதோடு மட்டுமின்றி, அந்த பகுதியில் நீண்ட நாட்களாக நிலவி வந்த குடிநீர், சாலை மற்றும் சாலைவழி கழிவுநீர் பிரச்சனைகள் குறித்த பொதுமக்களின் கோரிக்கையை அடுத்து, சட்டமன்ற உறுப்பினர் திரு. அனிபால் கென்னடி நேரில் பார்வையிட்டு, உடனடி நடவடிக்கை எடுத்து தீர்த்து வருகிறார்.
“எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவது தான் எங்களின் முக்கிய நோக்கம்” என்று சட்டமன்ற உறுப்பினர் திரு. அனிபால் கென்னடி கூறினார்.
இந்த முயற்சி நடைமுறைப்படுத்தப்பட்டால், நிகோலஸ் குடியிருப்பில் வசிக்கும் ஏழை மற்றும் சமூகப் பின்தங்கிய மக்களுக்கு சட்டபூர்வ உரிமைகள் கிடைப்பதுடன், அரசு நலத்திட்டங்கள் முழுமையாக பயனளிக்கக்கூடியவையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை தொடர்ந்து நேற்று புதுச்சேரி அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை புதுச்சேரி மாசு கட்டுப்பாடு குழுமம், மற்றும் கடற்கரை மேலாண்மை அதிகார அமைப்பு அலுவலகம் சென்று டாக்டர். யாசம் லட்சுமி நாராயண ரெட்டி IAS அவர்களை நேரில் சென்று சந்தித்து தடையில்லா சான்றிதழ் நில அளவை துறைக்கு அளிக்கும்படி அதற்கு கோப்பு ஒப்புதல் வழங்கும்படி சட்ட மன்ற உறுப்பினர் கேட்டு கொண்டார்.
சட்ட மன்ற உறுப்பினர் கோரிக்கை ஏற்று செய்து தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். உடன் கழக கிளை செயலாளர்கள் இருதயராஜ், ராகேஷ், கழக சகோதரர்கள் மோரிஸ், வின்சன்ட் அருன், அருள் ஆகியோர் உடன் இருந்தனர்.
English Summary
Improving the livelihood of ordinary people is the main objective MLA Anibal Kennedys speech