மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை..அரசு அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தல்!  - Seithipunal
Seithipunal


பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,  நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா, முதியோர், விதவை, கல்வி உதவி தொகை, வங்கி கடன், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 132 கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.

ஒவ்வொரு வாரமும்  நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், நீலகிரி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகளின் கீழ் செயல்படும் நியாய விலைக்கடையில் விற்பனையாளராக பணிபுரிந்த ராமசாமி என்பவர் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தமைக்காக, அவரது மனைவி  பார்வதி என்பவருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து, ரூ.25 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.

இக்கூட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) பழனிச்சாமி, சமூக பாதுகாப்புத் திட்ட (தனித்துணை ஆட்சியர) ராதாகிருஷ்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அலுவலர் சுரேஷ்கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Immediate action on the minds District Collector instructs government officials


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->