சென்னை | விடுதியில் இறந்து கிடந்த தனியார் நிறுவன ஊழியர்... கள்ளக்காதலி கைது.!! - Seithipunal
Seithipunal


சென்னையில் விடுதியில் தனியார் நிறுவன ஊழியரை கொலை செய்த கள்ளக்காதலியை போலீசார் கைது செய்தனர்.

சென்னை கொசப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரியா (42). இவருக்கு திருமணமாகி இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பல ஆண்டுகளாக பிரியா தனியாக வசித்து வருகிறார். இதையடுத்து பிரியாவுக்கும், பெரம்பூர் பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பிரகாஷ்(41) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இவர்கள் இரண்டு பேரும் பெரியமேடு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளனர். இதையடுத்து பிரியா, பிரகாஷ் திடீரென மயங்கி விட்டதாக விடுதி மேலாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து விடுதி மேலாளர், அறைக்கு வந்து பார்த்தபோது பிரகாஷ் இறந்து கிடந்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த பிரகாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் பிரியாவிடம் விசாரணை நடத்தியதில், மது போதையில் இருந்த இவர்களிடையே ஏற்பட்ட தகராறில், பிரியா பிரகாஷை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த பிரகாஷ் மயங்கி விழுந்து உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பிரியாவை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Illegal girlfriend arrested for private company employee in chennai


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->