அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த கணவன்-மனைவி.! மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை மாவட்டத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த கணவன்-மனைவி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள பெரிய குக்குண்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சரவணன் (50). இவரது மனைவி சாந்தி (45). இவர்கள் இருவரும் இன்று காலை தங்களது நிலத்திற்கு சென்றுள்ளனர்.

அப்பொழுது அங்கிருந்த மின்கம்பத்தில் இருந்து மின்சார கம்பி அறுந்து கீழே கிடந்ததை கவனிக்காமல், அதன் மீது கணவன்-மனைவி இருவரும் கால் வைத்துள்ளனர். இதனால் மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த கணவன்-மனைவி இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ஆற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Husband wife killed by electrocution in ranipet ராணிப்பேட்டை மாவட்டத்தில் அறுந்து கிடந்த மின்கம்பி மீது கால் வைத்த கணவன் மனைவி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள பெரி


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->