அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த கணவன்-மனைவி.! மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை மாவட்டத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த கணவன்-மனைவி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள பெரிய குக்குண்டி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சரவணன் (50). இவரது மனைவி சாந்தி (45). இவர்கள் இருவரும் இன்று காலை தங்களது நிலத்திற்கு சென்றுள்ளனர்.

அப்பொழுது அங்கிருந்த மின்கம்பத்தில் இருந்து மின்சார கம்பி அறுந்து கீழே கிடந்ததை கவனிக்காமல், அதன் மீது கணவன்-மனைவி இருவரும் கால் வைத்துள்ளனர். இதனால் மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த கணவன்-மனைவி இருவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ஆற்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Husband wife killed by electrocution in ranipet ராணிப்பேட்டை மாவட்டத்தில் அறுந்து கிடந்த மின்கம்பி மீது கால் வைத்த கணவன் மனைவி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள பெரி


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->