சந்தேகத்தால் ஏற்பட்ட விபரீதம்.. மனைவி மீது தீவைத்த கணவன்..!
Husband trying to kill his Wife in Chennai
மனைவியின் மீது சந்தேகம் தான் அவரை மன்னனை ஊற்றி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வளசரவாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜா இதற்கு திருமணமாகி ராதா என்ற மனைவி உள்ளார். ராஜா பெயிண்டர் ஆக வேலை செய்து வந்த நிலையில் கோடம்பாக்கத்தில் வீட்டு வேலை செய்து வருகிறார். கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் வழக்கம்போல் நேற்று இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் வீட்டில் இருந்த மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துள்ளார். ராதாவின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜாவை கைது செய்தனர். மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Husband trying to kill his Wife in Chennai