மகள்கள் காதல் திருமணம் செய்ய நீதான் காரணம்.. மனைவியை கொலை செய்த கணவன்..! - Seithipunal
Seithipunal


மகள்கள் காதல் திருமணம் செய்து கொண்டதால் மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்ததியுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம், கடம்பூர் பகுதியை சேர்ந்தவர் சிங்காரவேல். இவருக்கு 4 பெண்கள் உள்ளனர். இந்நிலையில், அவர்களில் இருவர் காதல் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதனால், அவர் மனைவியிடம் அடிக்கடி தகராற்றில் ஈடுப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சம்பவதன்று மது அருந்திவிட்டு வந்த அவர் மனைவியிடம் மகள்கள் ஓடிபோக நீதான் காரணம் என சண்டையிட்டுள்ளார். ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றவே சிங்காரவேலு மனைவியை கட்டையால் அடித்து கொலை செய்துள்ளார்.

தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் சிங்கரவேலுவை கைது செய்தனர்,


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Husband kills is wife


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->