ஊதாரிதனமாக ஊர்சுற்றிய கணவன்.. தட்டிகேட்ட மனைவியை கொலை செய்த கொடூரம்..! - Seithipunal
Seithipunal


ஊதாரி தனத்தை தட்டிகேட்ட மனைவி கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் ஒகளூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம்(50). இவருக்கு முத்துலட்சுமி(45) என்ற மனைவியும் மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். கடந்த 15 ஆண்டுகளாக வெளிநாட்டில் இருந்த அவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.

இந்நிலையில், அவர் வெளிநாட்டில் இருந்து அனுப்பிய பணத்தில் முத்துலெட்சுமி சேமித்தும் சில இடங்களையும் வாங்கியுள்ளார். ஊருக்கு திரும்பி வந்த அவர் ஊதாரி தனமாக செலவழித்துள்ளார். இதனால், கணவன் மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது.

சம்பவதன்று, சமைத்து கொண்டிருந்த போது வீட்டிற்கு வந்த ஆறுமுகம் அவருடன் தகராற்றில் ஈடுப்பட்டார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே ஆறுமுகம் அங்கிருந்த ஊதாங்குழால் முத்துலெட்சுமியை தாக்கியுள்ளார்.

இதில், முத்துலெட்சுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரின் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த  ஆறுமுகத்தை கைது செய்த காவல்துறையினர் விசாரணைன் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Husband Kill His Wife Near Perambalur


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->