மதுபோதையில் உணவக உரிமையாளர் கொலை.. தஞ்சை அருகே பரபரப்பு..!
Hotel owner Killed Near Thanjavur
மதுபோதையில் உணவக உரிமையாளர் கொலை செய்தவர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
தஞ்சை மாவட்டம் அண்டகுடி கிராமத்தில் அசோகன் என்பவர் சாலையோர கடை நடத்தி வருகிறார். இந்த கடையின் அருகே அந்தப் பகுதியில் வேலை செய்யும் அன்பழகன் என்பவர் மது குடித்து வந்து சிறுநீர் கழித்து வந்துள்ளார்.
இதுகுறித்து அசோகன் தட்டிக் கேட்கும் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்படுவது வழக்கம் என கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று வழக்கம்போல இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது அசோகன் கையில் இருந்த கடப்பாரை எடுத்து அன்பழகனை அடித்ததாக கூறப்படுகிறது.
இதில் அசோகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் இதனையடுத்து காவல் நிலையத்திற்கு சென்ற அவர் அசோகனை கொலை செய்ததை கூறி சரணடைந்தார். மதுபோதையில் உணவக உரிமையாளரை கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Hotel owner Killed Near Thanjavur