#காஞ்சிபுரம் || விடுதி மாணவர் தூக்கிட்டு தற்கொலை.. காவல்துறையினர் விசாரணை..! - Seithipunal
Seithipunal


விடுதியில் தங்கி இருந்த மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரை சேர்ந்த அலோக்குமார் என்பவர் காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புத்தூர் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2 ம் ஆண்டு படித்து வருகிறார். செமஸ்டர் விடுமுறைக்கு ஊருக்கு செல்லாமல் அவர் விடுதியிலேயே தங்கியுள்ளார். இந்நிலையில், அவரது அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது.

இதனால், அதிர்ச்சியடைந்த மாணவர்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் அறைக்கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அவர் தூக்கில் அழுகிய நிலையில், பிணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரின் உடலை மீட்ட காவல்துறையினர் பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hostel Student Committed Suicide In Kanjipuram


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->