#மக்களே உஷார்: 4ஆம் தேதி வரை வெயில் சுட்டெரிக்கும் - வானிலை மையம் எச்சரிக்கை
Heat will increase for tamilnadu till June 4th
தமிழகத்தில் வருகின்ற 4ம் தேதி வரை இயல்பை விட வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. மேலும் ஆங்காங்கே ஒருசில இடங்களில் மழை பெய்தாலும் வெப்பத்தின் தாக்கம் குறைந்த பாடில்லை. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில், இன்று முதல் 04ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்றும், ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை பொருத்தவரை இரண்டு நாட்களுக்கு நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும், அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை இட்டியே இருக்கும்.
மேலும் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
English Summary
Heat will increase for tamilnadu till June 4th