சிறுவன் கடத்தல்: பூவை ஜெகன் மூர்த்தியின் முன்ஜாமீன் மனு மீது நாளை விசாரணை..!
Hearing tomorrow on Poovai Jagan Murthys anticipatory bail application in the child abduction case
சிறுவன் கடத்தல் வழக்கில் முன் ஜாமீன் கோரிய புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜெகன் மூர்த்தி மனு மீதான விசாரணை நாளை நடைபெறவுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞர், தேனியைச் சேர்ந்த விஜய ஸ்ரீ என்கிற பெண்ணை இன்ஸ்டாகிராமில் காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார்.இதற்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த நிலையில், தனுஷ் வீட்டிற்குள் சிலர் நுழைந்து இளைஞரின் சகோதரர் இந்திரஜித்தை கடத்தி சென்றதோடு, பின்னர் சிறிது நேரத்தில் அவரை அவர் வீட்டில் விட்டு சென்றனர்.

இந்த விவகாரம் தொடர்பில் புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து போலீசார் கடத்தலில் ஈடுபட்ட 02 பேரை கைது செய்தனர். இந்த கடத்தல் சம்பவத்தில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜெகன் மூர்த்திக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது.
இந்நிலையில் கடத்தல் வழக்கில் போலீசார் தன்னை கைது செய்வார்கள் என்ற அச்சத்தில் ஜெகன் மூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜானிக்காக மனுதாக்கல் செய்துள்ளார். இதனையடுத்து இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தலைமை நீதிபதியிடம் அனுமதி கோரப்பட்டது. இதனை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை வழக்கின் விசாரணை நடைபெறவுள்ளது.
English Summary
Hearing tomorrow on Poovai Jagan Murthys anticipatory bail application in the child abduction case