கருப்பு நிறத்தில் ஆரோக்கியச் செல்வம்! நீலகிரியிலிருந்து நாட்டை ஆச்சரியப்படுத்தும் புதிய கேரட் ஆராய்ச்சி!
Health wealth black New carrot research from Nilgiris surprises country
நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் சிம்ஸ் பூங்கா, இந்த முறை அசாதாரணமான ஒரு வேளாண் ஆராய்ச்சிக்கு தளமாகியுள்ளது. தோட்டக்கலைத்துறை சார்பில் முதன்முறையாக கருப்பு கேரட் பயிரிடும் சோதனை முயற்சி இங்கு தொடங்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிக்கான உயர்தர விதைகள் டெல்லியில் இருந்து சிறப்பாக கொண்டு வரப்பட்டு, பூங்கா நர்சரியில் நட்டுவிடப்பட்டன.

விதைப்பணியில், தோட்டக்கலைத்துறையின் சொந்த உற்பத்திப் பட்ட மண்ணுயிர் உரம் கலக்கப்பட்டு, கேரட்டின் வளர்ச்சிக்கு உயிரோட்டம் அளிக்கப்பட்டுள்ளது. பூங்கா மேலாளர் லட்சுமணன் தலைமையில் தோட்டக்கலை பணியாளர்கள் இந்த புதிய முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சாதாரண ஆரஞ்சு நிற கேரட்டுக்கு மாற்றாக, இந்த கருப்பு கேரட் மிகுந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மையுடன், 3 முதல் 3½ மாதங்களில் அறுவடைக்குத் தயார் ஆகும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
வடஇந்தியாவில் பிரபலமான இந்த கருப்பு கேரட் பல்வேறு உணவு வகைகள், இனிப்புகள், குறிப்பாக கேக் தயாரிப்பில் பெரிதும் பயன்படும் ஒரு முக்கிய பொருளாக விளங்குகிறது.நீலகிரியில் பெரும்பாலும் ஆரஞ்சு நிற கேரட் மட்டும் பயிரிடப்பட்டுவரும் நிலையில், கருப்பு கேரட்டின் இந்த புதுமையான சோதனை முயற்சி குறிப்பிடத்தக்க மாற்றத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில்,“கருப்பு கேரட் வளர்ச்சி நிலைகளை நுணுக்கமாக ஆய்வு செய்வதற்காக இதை விதைத்துள்ளோம். பயிர் முழுமையாக வளர்ந்த பின், அதன் விதைகளையும் சேகரித்து எதிர்கால உற்பத்திக்கான பயனுள்ள தகவல்களைப் பெற உள்ளோம்.
கருப்பு கேரட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதில் அதிக அளவு பொட்டாசியம், வைட்டமின் K ஆகியவை உள்ளன. மேலும் சோப்பு உற்பத்தியில் தேவையான இயற்கை நிறமிப்புப் பொருளாகவும் இது பயன்படுத்தப்படுகிறது,” என தெரிவித்தனர்.
English Summary
Health wealth black New carrot research from Nilgiris surprises country