செய்முறை தேர்வில் மதிப்பெண்ணை குறைத்து விடுவேன்.. பள்ளிமாணவிக்களுக்கு பாலியல் தொல்லை அளித்த தலைமையாசிரியர்..! - Seithipunal
Seithipunal


மதிப்பெண்களைக் குறைத்து விடுவதாக மிரட்டி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து வந்த தலைமையாசிரியர் காவல்துறையினர் கைது செய்தனர்.

சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் விஜயகுமார் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். செய்முறை தேர்வுகளில் மதிப்பெண்கள் எடுத்து விடுவதாக கூறி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்து வந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து அறிந்த முன்னாள் மாணவர் ஒருவர் வாட்ஸ்அப் குழுவில் இதனை சக மாணவர்களுக்கு பகிர்ந்துள்ளார். இதனை அடுத்து பெற்றோர்களும் முன்னாள் மாணவ மாணவிகளும் அந்த பள்ளியை முற்றுகையிட்டனர்.

 தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் பள்ளி மாணவிகளுக்கு தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Headmaster Arrested In POCSO AT SALEM


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->