கோவையில் இரண்டு மடங்காக அதிகரிக்கப்படும் பசுமை போர்வை திட்டம் !! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு கோவை மாவட்டத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் இரண்டு மடங்கு பசுமைப் பரப்பை அதிகரிக்க  திட்டமிட்டுள்ளதாக மாநிலத் தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார். கோவையைச் சேர்ந்த சிறுதுளி என்ற சுற்றுச்சூழல் அமைப்பின் 21வது இத்திட்டம் அறிவிக்கப்பட்டது, கோவையில் நொய்யல் ஆற்றின் அடையாளம் காணப்பட்ட 34 கிளை நதிகளில் விரைவில் புத்துயிர் அளிக்கும் பணிகளை மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

சிறுதுளி போன்ற சுற்றுச்சூழல் அமைப்புகளின் நீர்நிலைகளைப் பாதுகாப்பதற்கும் மரங்களின் பரப்பை அதிகரிப்பதற்கும் மாநில அரசின் முழு ஒத்துழைப்பையும் தருவதாக உறுதி கூறினார். மேலும் கோயம்புத்தூர் மாவட்டத்தைத் தவிர மற்ற இடங்களுக்கும் தங்கள் சமூகப் பணிகளை விரிவுபடுத்துமாறு அவர் அமைப்புக்கு வேண்டுகோள் விடுத்தார்.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் தமிழக அரசு எடுத்து வரும் முயற்சியை சுட்டிக்காட்டி பேசிய அமைச்சர், பனை மரங்களை காப்பாற்றும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருவதாகவும், அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியையும் மேற்கொண்டுள்ளதாகவும் கூறினார். 

இந்த பசுமை திட்டம் தொடங்கப்பட்ட பிறகு தமிழகம் முழுவதும் 1 கோடிக்கும் மேற்பட்ட பனை மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளுடன் இணைந்து, மாநிலத்தில் பசுமைப் பரப்பை 23.8% லிருந்து 33% ஆக உயர்த்த தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. மேலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஏற்றுக்கொண்டதன் காரணமாக மாநிலத்தில் கார்பன் வெளியேற்றம் மிகக் குறைவாக இருப்பதை தெரிவித்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

green blanket project to be extended


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->