கழன்று ஓடிய முன்பக்க சக்கரம்.. பதறிப்போன பேருந்து பயணிகள்.!! என்னாச்சு? - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள வடரங்கம் கிராமத்திற்கு A8 என்ற  அரசு பேருந்து இயக்கப்படுகிறது. வழக்கம்போல அந்த பேருந்து இன்று இயக்கப்பட்டபோது பணகாட்டாங்குடி என்ற கிராமம் அருகே சென்று கொண்டிருந்தபோது அரசு பேருந்தில் வலதுபுற முன் சக்கரம் கழண்டு ஓடியது. 

இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அனைவரும் பதறிப் போனார்கள். இதனை கவனித்த பேருந்து ஓட்டுனர் சாதுரியமாக அரசு பேருந்தை நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அரசு பேருந்து முறையாக பராமரித்து இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Govt bus front wheel away from bus in seerkazhi


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->