படப்பை குணா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ள 'படப்பை குணா'வை வரும் 31 ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க, நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், மதுரமங்கலத்தைச் சேர்ந்தவர் படப்பை குணா. இவர் மீது கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இதனால் அவரை போலீசார் கைது செய்ய தேடி வந்தனர். சிறப்பு தனிப்படை போலீசாரால் தேடப்பட்டு வந்த படப்பை குணா கடந்த 25-ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். 

நீதிமன்றத்தில் சரணடைந்த படப்பைக் குணாவை சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும், படப்பை குணா  சரணடைந்தால் சட்ட விதிகளுக்கு உட்பட்டு அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறையினர் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி படப்பை குணா மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.  சிறையில் உள்ள படப்பை குணாவை ஓராண்டு தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

goondas act for padappai guna


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->