திருவள்ளூரில் துணிகரம்; அடகுக்கடை சுவரில் துளையிட்டு கொள்ளை; தங்கம், வெள்ளி நகைகள் மாயம்..! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் அடுத்த தாமரைப்பாக்கத்தில் வசித்து வருகின்றவர் புத்தாராம் (46). கடந்த 07 வருடத்துக்கு முன் அருகே உள்ள எறையூர் கிராமத்தில் அடகு கடை தோணுகியுள்ளார். அவரது கடைக்கு  அருகில் சம்சுதீன் என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் 07.30 மணியளவில்  புத்தாராம் தனது, அடகு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.கொஞ்ச நேரத்தில் பக்கத்து கடை சம்சுதீன் புத்தாராமை செல்போனில் தொடர்பு கொண்டு கடையின் பின்புறம் துளையிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். சம்பவத்தை கேட்டு உடனடியாக புத்தாராம் விரைந்து வந்து கடையை திறந்து பார்த்துள்ளார்.

அப்போது பின்பக்க சுவரில் துளையிட்டு மர்மநபர்கள் புகுந்து அடகு கடையில் உள்ள 04 கிராம் தங்கம், 176 கிராம் எடை வெள்ளி பொருட்கள் மற்றும் ஒரு ஜோடி கொலுசு, ரூ.20 ஆயிரம் ரூபாயை திருடிச்சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.

இது குறித்து புத்தாராம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்படி, புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.  திருவள்ளூர் டிஎஸ்பி தமிழரசி உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் தலைமையில் போலீசார் வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.

அப்போது அடகு கடையின் சுவர் உள்ளிட்ட பகுதிகளில் பதிவாகியிருந்த மர்ம நபர்களின் ரேகைகளை பதிவு செய்துள்ளதோடு, அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gold and silver jewelry stolen from a pawn shop in Thiruvallur after thieves drilled a hole in the wall


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->