#BREAKING | 'நீதிமன்ற அவமதிப்பு' சுவாதி ஒரு பொய் சாட்சியா? அதிரடி உத்தரவை பிறப்பித்த உயர்நீதிமன்ற கிளை!
Gokulraj Case MaduraiHC order 30112022
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தொட்டிபாளையம் பகுதி ரயில் தண்டவாளத்தில், சேலம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ் சடலமாக கிடந்தார். இந்த வழக்கில் கைதான பத்து பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தும், ஐந்து பேரை விடுதலை செய்தும் உயர்நீதிமன்ற கிளை தீர்ப்பளித்தது.
தங்களுக்கு விதித்த ஆயுள் தண்டனையை ரத்து செய்யக்கோரி யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, பிறழ்சாட்சியாக ஆஜரான சுவாதி, வழக்கு தொடர்பான வீடியோவில், வருவது நான் தானா என ஞாபகம் இல்லை என்றும், அது கோகுல் ராஜ் போல் இருப்பதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து 3 முறை அந்த வீடியோவை போட்டு காட்டிய நீதிபதிகள், உங்கள் புகைப்படத்தை பார்த்து நீங்களே தெரியவில்லை என்று சொல்கிறீர்கள். இதை எப்படி ஏற்பது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
வாழ்க்கையில், நியாயம், தர்மம், சத்தியம் முக்கியம் என சுவாதியிடம் நீதிபதிகள் கூறினர். பிறழ்சாட்சியான சுவாதியிடம் நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்வி எழுப்பியதால் அவர் மயக்கமடைந்ததாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் உள்ள மருத்துவமனையில் சுவாதி அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியான சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று, உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் மீண்டும் எச்சரிக்கை விடுத்தனர்.
பின்னர், உண்மையை கூற சுவாதிக்கு வாய்ப்பளிக்க இரண்டு வாரம் அளிக்கப்படுகிறது என்றும், சுவாதி பொய்யான சாட்சியம் அளித்தால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுக்க வேண்டும் என்று, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
English Summary
Gokulraj Case MaduraiHC order 30112022