அதிர்ச்சி.. கருக்கலைப்பு செய்த 17 வயது சிறுமி உயிரிழப்பு.!! - Seithipunal
Seithipunal


திருத்தணி அருகே கருக்கலைப்பு செய்த சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி அருகே சகோதரர் உறவுமுறை உள்ளவரை காதலித்த பதினேழு வயதுள்ள சிறுமி தற்போது 5 மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர் அவரது காதலை ஏற்காமல் தனியார் மருத்துவமனையில் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்துள்ளனர். 

அப்போது சிறுமிக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சிறுமியின் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கருக்கலைப்பு செய்த பதினேழு வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

girl died for abort baby in thiruthani


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->