திருவள்ளூர்.! 11 வயது சிறுமி பூச்சி மருந்து குடித்து தற்கொலை.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் 11 வயது சிறுமி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் காட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவரின் மகள் சோனிகா (வயது 11). இவர் ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சோனிகாவை பெற்றோர் கண்டித்த நிலையில் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இதனால் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி கீழே விழுந்துள்ளார். இதையடுத்து சோனிக்காவை மீட்டு பெற்றோர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், சோனிக்கா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Girl commits suicide by drinking poison in tiruvallur


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->