பொது வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு..தொழிற்சங்கம் அறிவிப்பு!
General strike postponed Union announcement
புதுச்சேரியில் மே 20 ஆம் தேதி நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தம், (பந்த்) மறியல் போராட்டங்களை ஒத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய நாட்டிலுள்ள அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் வாரி கூட்டமைப்புகள் 18.03.2025 அன்று இந்திய தலைநகர் டெல்லியில் கூடி தொழிலாளர்களின் தேசிய பேரவை கூட்டத்தை கூட்டின. (National Convention of Workers).
இந்த பேரவை கூட்டம் இந்திய உழைக்கும் மக்கள் சந்திக்கக்கூடிய பற்றி எரியும் பிரச்சனைகள் குறித்து விவாதித்துள்ளது. அப்போது, தொழிலாளர்கள் சார்பாக தனித்தும் கூட்டாகவும் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளை மத்திய அரசு புறக்கணித்துள்ளதோடு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக தொழிலாளர் விரோத நடவடிக்கைகள், சட்டத்திருத்தங்கள் மேற்கொள்வது பற்றி தேசிய பேரவை விவாதித்து 20.05.2025 அன்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்தை மேற்கொள்வதென ஏகமனதாக முடிவு செய்துள்ளது.
இப்போராட்டத்தை புதுச்சேரியில் முழு வெற்றியடைய செய்வதற்காக கூடிய அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் வாரி கூட்டமைப்பின் புதுச்சேரி மாநில அமைப்புகளின் கூட்டம், புதுச்சேரி அரசு புதுச்சேரி மாநில தொழிலாளர்களின் நலனை முற்றாக புறக்கணிப்பதையும் விவாதித்து புதுச்சேரி அரசை வலியுறுத்தி கோரிக்கைகளையும் இணைத்து 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 20.05.2025 நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் பங்கேற்பது, புதுச்சேரியில் வேலை நிறுத்தம் மற்றும் கடையடைப்பு, மறியல் போராட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் தொழிற்சங்கங்களின் கூட்டம் டெல்லி தலைநகரில், நடைபெற்றது இக்கூட்டத்தில் நடந்து முடிந்த,இந்தியா, பாகிஸ்தான் போர் நடவடிக்கைகள் சம்பந்தமாக விவாதிக்கப்பட்டது , இந்த சூழலில் மே 20 ஆம் தேதி நடைபெற உள்ள அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை ஒத்தி வைப்பது என்றும் ஜூலை 9ஆம் தேதி அகில இந்தியவேலை நிறுத்த போராட்டத்தை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது அதன்படி புதுச்சேரியில் மே 20 ஆம் தேதி நடைபெற உள்ள பொது வேலை நிறுத்தம், (பந்த்) மறியல் போராட்டங்களை ஒத்தி வைப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
General strike postponed Union announcement